×

போலி கடற்படை அதிகாரி கைது

மதுரை, அக். 7: மதுரை நரிமேடு சோனையா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(52). இவர் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் வண்டியில் வைத்து வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இரவு நேரம் இவர் கடைக்கு கடற்படை அதிகாரி உடையில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை கடற்படை கஷ்டம்ஸ் அதிகாரி என்று மிரட்டி, செல்போனில் படம் எடுத்து மிரட்டியுள்ளார்.

இது குறித்து ரவிச்சந்திரன் அவசர போலீஸ் உதவிக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து ரவிச்சந்திரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி கடற்படை அதிகாரியை தேடிய போது, அவர் கரும்பாலை எஸ்எம் நகர் செய்யது அலி என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post போலி கடற்படை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Navy ,Madurai ,Ravichandran ,Sonaya Temple Street ,Madurai Narimedu ,Gorippalayam ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!