×

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை; சென்ற ஆண்டை விட குறைவு

சென்னை: தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச்சேரி  உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்பனை ஆகும். டாஸ்மாக்கில் சராசரியாக, வார நாட்களில் ரூ.70 முதல் 75 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் ரூ.90 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். தீபாவளி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், ஒரு நாள் விற்பனை மட்டும் ரூ.100 கோடியை கடக்கும். அந்த வகையில், நேற்று காலையில் இருந்து தமிழகத்தில் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு புத்தாண்டின் போது மது விற்பனை, முந்தைய ஆண்டின் சாதனையை முறியடிக்கும். ஆனால், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு மது விற்பனை குறைந்து, இந்த தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில், 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.148 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டின் போது ரூ.159 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை; சென்ற ஆண்டை விட குறைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,New Year ,Chennai ,New Year's Eve ,Sabarimala ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...