×

புதிய மயான கட்டிடம் கட்டி தர வேண்டும்

 

முத்துப்பேட்டை, ஜூலை 18: உதயமார்த்தாண்டபுரம் கீழக்காட்டில் புதிய மயான கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கீழக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்கு அதே பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் பொது மயானம் கட்டிடம் ஒன்று உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு 2003 – 2004ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மயான கட்டிடம் தற்போது முற்றிலும் பொலிவிழந்து, அதன் மேல் சிலாப் பகுதி சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே செல்கிறது. இதேபோல இந்த கட்டிடத்தின் தாங்கு பில்லர்கள் அனைத்தும் எந்தநேரத்திலும் முறிந்து விழும் தருவாயில் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இருக்கும் கட்டிடத்தை கண்டு அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் பிணத்தை எரிக்க வரும்போது மிகுந்த அச்சத்துடன் கையாண்டு வருகின்றனர். இதனால் இந்த பழுதடைந்த பொது மயான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் நாளுக்குநாள் கட்டிடம் உருமாறி ஆபத்தான நிலைக்கு மாறி வருகிறது. ஒவ்வொரு முறையும் அங்கு பிணத்தை எடுத்து செல்லும்போது அச்சம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே ஆபத்தான மயான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post புதிய மயான கட்டிடம் கட்டி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Udayamarthandapuram Keezhakat ,Geezakadu ,Udayamarthandapuram ,
× RELATED காத்து வாக்குல இரண்டு காதல்… கழுத்தை...