×

புண்ணாக்கு தண்ணீரில் விஷம் கலந்து 3 பசுக்கள் கொலை?

உசிலம்பட்டி, ஜூன் 7: உசிலம்பட்டி அருகே புண்ணாக்கு தண்ணீரில் விஷம் கலந்து 3 பசு கொலை செய்யப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 7 பசுமாடுகளை வளர்த்து அதற்கு தேவையான தீவனங்களை பயிரிட்டு வருகிறார். பசுமாடுகளை தினசரி தீவணங்கள் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது, ஊர வைத்த புண்ணாக்கு தண்ணீர் வைத்து அதன் பசியாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடுகளில் மூன்று பசுமாடுகளுக்கு புண்ணாக்கு தண்ணீர் வைத்துள்ளார். தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே பசுமாடுகள் மயங்கி விழுந்து நுரை தள்ளியவாறு துடிதுடித்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாயி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், புண்ணாக்கு நீரில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் பசுமாடுகள் மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புண்ணாக்கு தண்ணீரில் விஷம் கலந்து 3 பசுக்கள் கொலை? appeared first on Dinakaran.

Tags : Punnaku ,Usilambatti ,Dinakaran ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...