திருச்சி, ஜூலை 4: திருச்சி ரங்கத்தில் உள்ள பீடா விற்பனை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியபோது புகையிலை விற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 1.200 கிலோ புகையிலையை பறிமுதல் செய்ததுடன் விற்பனையாளரான ரங்கம் தென்கரை தெப்பக்குளத்தை சேர்ந்த குணசேகரன்(48) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை சப்ளை செய்த டீலரான உறையூர் ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
The post புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.