×

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி

நாகர்கோவில், ஆக.27: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர் பெரியார், பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர், பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தயாளன், துணைத் தலைவர் நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். கல்லூரி பேராசிரியர் மலர் ரத்னா போட்டியினை ஒருங்கிணைத்தார். அதிகமான மாணவ, மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர். பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

The post பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Periyar ,Reasoners Association ,Nagercoil ,Scott Christian College ,Kanyakumari District Reasoners Association ,
× RELATED தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்