×

நெல்லையில் ‘15’யை கடத்திய ‘17’

நெல்லை, செப். 17: நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி மாயமானார். உறவினர்கள், தோழிகள் வீடுகளில் அவரது பெற்றோர் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் மாணவியை 17 வயது சிறுவன், திருமண ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததும், இருவரும் தஞ்சாவூரில் வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது. நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார், தஞ்சாவூர் சென்று மாணவியை மீட்டனர். சிறுவன் மீது வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

The post நெல்லையில் ‘15’யை கடத்திய ‘17’ appeared first on Dinakaran.

Tags : Nellie ,Nanguneri ,
× RELATED எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள்...