×

குடும்பத்தகராறை விசாரிக்க போலீஸ் வந்ததால் ஆத்திரம்: போதையில் 2 வயது குழந்தையை ஆட்டோ மீது வீசிய கொடூர தந்தை

திருமலை: ஐதராபாத்தில் குடும்பத்தகராறை விசாரிக்க போலீசார் வந்ததால், ஆத்திரமடைந்து 2 வயது குழந்தையை ஆட்டோ மீது வீசி கொல்ல முயன்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தின் ஜெகத்கிரி குட்டாவைச் சேர்ந்தவர் சிவாகவுட், ஆட்டோ டிரைவர். இவர் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் நேற்று முன்தினம் இரவு சிவாகவுட் வீட்டுக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிவாகவுட் தனது இரண்டாவது மகன் ருத்விக்(2) என்பவரை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார்.

போலீசார் தன்னை கைது செய்தால், குழந்தையை கொன்றுவிடுவேன் எனக்கூறி கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டோ மீது ருத்விக்கை தூக்கி வீசினார். தொடர்ந்து, ருத்விக்கை தூக்கி தரையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ருத்விக்கை மீட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தை உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், வருங்காலத்தில் ஏதாவது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் கண்முன்னே நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மும்பை செம்பூரில் வீடு ஒன்றில்...