×

தமிழ் இலக்கிய போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்

 

தஞ்சாவூர், ஜூலை 19: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட தமிழ் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடும் விதமாக தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் தமிழ்நாடு தின சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

இக்கண்காட்சியானது 23ம்தேதி வரை பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட தமிழ் இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

The post தமிழ் இலக்கிய போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Development Department ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா...