- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்
- தஞ்சாவூர்
- பொது தேர்தல்
- அப்சர்வர்
- கிகேடா செம
- தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல் 2024
- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்
தஞ்சாவூர், ஏப்.7: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்ககோரி விழிப்புணர்வு சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது தேர்தல் பார்வையாளர் கிகேட்டா சேம கலந்துகொண்டார். தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிகேட்டோ சேம துவக்கி வைத்து சிலம்பாட்ட மாணவர்களை பாராட்டினார். 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாது வாக்களியுங்கள். ஏப்ரல் 19 ம் தேதி அனைவருக்கும் தேர்தல் திருவிழா. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர் கிகேட்டோ சேம தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு சிலம்பாட்டம் appeared first on Dinakaran.