×

ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்

போச்சம்பள்ளி, ஜூலை 4: போச்சம்பள்ளி தாசில்தார் சத்யாவிற்கு, ஜல்லிகற்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளுடன் வாகன தணிக்ைக மேற்கொண்டார். அப்போது கொடமாண்டப்படி கூட்ரோடு பகுதியில் டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு 2 பேர் தப்பியோடினர். பின்னர் லாரியை தாசில்தார் சோதனையிட்டார். அதில், 2 யூனிட் ஜல்லிகற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஜல்லி கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Tahsildar Sathya ,Mathur National Highway ,Koodamanpadi Kootrodu ,Lorry ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்