×

சாலை பணி செய்த ஒப்பந்ததாரர் மீது வழக்கு

மோகனூர், செப்.25: நாமக்கல் – திருச்சி சாலையில் உரிய பாதுகாப்பு மேற்கொள்ளாமல் பணிசெய்த ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி அருகே நாமக்கல்-திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த 21ம் தேதி ரமேஷ் என்ற விவசாயி டூவீலரில் வந்த போது சாலை அகலப்படுத்தும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியானார்.

சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும்போது, பொது மக்களுக்கு விழிப்புணர்வு பலகை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆனால் உரிய பாதுகாப்பின்றி பணி செய்த மதுரையை சேர்ந்த ஒப்பந்ததாரர் தேவானந்த், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சாலை பணி செய்த ஒப்பந்ததாரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Moganur ,Namakkal-Tiruchi ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்