×

சாதி சான்றிதழ் கேட்டு பாம்புகளுடன் ஆர்டிஓ ஆபீஸில் மனு அளிக்க வந்த பழங்குடியினர்

சிவகங்கை : சாதிச்சான்று கேட்டு சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் பாம்புகளோடு மனு அளிக்க வந்த பழங்குடியின மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பர்மா காலனியை சேர்ந்த காட்டுநாயக்கன் இன குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் 40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காட்டுநாயக்கன் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு நிறுவனர் மகேஸ்வரி தலைமையில் நேற்று ஏராளமானோர் சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்திற்கு பாம்புகளுடன் வந்து சாதிச்சான்று கேட்டு மனு அளித்தனர்.கைகளில் பாம்புகளோடு வந்து மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post சாதி சான்றிதழ் கேட்டு பாம்புகளுடன் ஆர்டிஓ ஆபீஸில் மனு அளிக்க வந்த பழங்குடியினர் appeared first on Dinakaran.

Tags : RTO ,Sivagangai ,Sivaganga ,Dinakaran ,
× RELATED ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.36 லட்சம் பறிமுதல்