கோவை, ஜூலை 5: தமிழ்நாடு ‘கோ கோ’ சங்கம், கோவை மாவட்ட கோகோ சங்கம் சார்பில், 18 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ‘41வது ஜூனியர் ‘கோ கோ’ போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, நீலகிரி, சேலம், சிவகங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்ட அணிகள் பங்கேற்றன. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடிய கோவை அணி மற்றும் சிவகங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இரு அணி வீரர்கள் தங்களின் முழுத்திறணையும் வெளிப்படுத்தினர். போட்டி முடிவில் கோவை அணி 18-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
The post ‘கோ கோ’ போட்டியில் கோவை அணி வெற்றி appeared first on Dinakaran.