×

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் அதிமுக ஆட்சியில் ரூ.9 ஆயிரம் கோடி முறைகேடு : தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திய கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம் புதூரை சேர்ந்த விஸ்வலிங்க சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்<'கடந்த 2018ம் ஆண்டு  நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலின் போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட  விண்ணப்பித்தேன். ஆனால், முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி தேர்தல் நடைபெறவில்லை. இதேபோல், கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் 95 சதவீத கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளே  தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளது.எனவே, இது மோசடி குறித்து உரிய விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிட  வேண்டும்,'என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்….

The post கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் அதிமுக ஆட்சியில் ரூ.9 ஆயிரம் கோடி முறைகேடு : தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாநில கல்லூரியில் ரூ.21 கோடி...