×

கர்நாடகவில் வினோதம்: நீரில் மூழ்கி பலியான சிறுவனை உயிர்த்தெழச் செய்ய உடல் மீது உப்புக் குவியலை போட்டு காத்திருந்த சோகம்

பெங்களுர் : நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனை உப்பு குவியலில் புதைத்து மீண்டும் உயிர்த்தெழுப்ப முயன்ற வினோத சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சிரவாரா கிராமத்தில் சுரேஷ் என்கிற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது திடீர் என்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட பெற்றோர், கிராம மக்களும் சிறுவனை மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டது. 80 கிலோ உப்பை கொட்டி சிறுவனின் தலையை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர். அவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தும் உயிர்த்தெழ வில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவன் சடலத்தை முறைப்படி மயானத்தில் அடக்கம் செய்தனர். உயிழந்த சிறுவனை உயிர்த்தெழச் செய்ய கிராம மக்கள் செய்த இந்த வினோத நடைமுறை பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.      …

The post கர்நாடகவில் வினோதம்: நீரில் மூழ்கி பலியான சிறுவனை உயிர்த்தெழச் செய்ய உடல் மீது உப்புக் குவியலை போட்டு காத்திருந்த சோகம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,
× RELATED சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு...