×

கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

 

திருப்பூர் ஜூன் 14: திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்காக அரசு பஸ் தயாரானது. கண்டக்டராக ரங்கசாமி (57) இருந்தார். அப்போது வேகமாக வந்த 2 பேர் தஞ்சாவூர் செல்ல வேண்டும். சீட் உள்ளதா? என்று கண்டக்டரிடம் கேட்டனர். அப்போது அவர் சீட் இல்லை என்று கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கண்டக்டரை தாக்கினர். இதில் காயம் அடைந்த கண்டக்டர் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களையும் விசாரணை நடத்தியபோது அவர்கள் திருப்பூரை சேர்ந்த யுவராஜ் (21), புகழேந்தி (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Thanjavur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி