×

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எரிந்த நிலையில் பச்சிளங்குழந்தை உடல் மீட்பு!: குப்பையில் வீசி சென்ற கொடூரம்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் அருகே குப்பை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிடலாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குழந்தை இல்லாத பலர், பல இடங்களில் குழந்தை திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று குழந்தைக்காக ஏங்கும் நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை குப்பையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவலர்களிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றோம். பச்சிளங்குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதா? அல்லது உயிரிழந்ததால் குப்பையில் போட்டு எரிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றோம். விசாரணையின் முடிவில் ஒட்டுமொத்த தகவலும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை பாக்கியம் பெற பலர் கோயில் கோயிலாக வேண்டி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. …

The post கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எரிந்த நிலையில் பச்சிளங்குழந்தை உடல் மீட்பு!: குப்பையில் வீசி சென்ற கொடூரம்..!! appeared first on Dinakaran.

Tags : Neyveli, Cuddalore district ,Cuddalore ,Indira Nagar, Neyveli, Cuddalore district ,Dinakaran ,
× RELATED இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி...