×

ஊராட்சி தலைவர்கள் கூட்டம்

திருப்புவனம், அக்.9: திருப்புவனம் ஒன்றியத்தில் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு பணிகள் ஒதுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றினர். திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. ரவி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு விபரங்கள் விவாதிக்கப்பட்டது. திருப்புவனம் ஒன்றிய புதிய கட்டிடத்தில் தற்போதைய ஊராட்சி தலைவர்களின் பெயர் பொரித்த கல்வெட்டு வைக்கவேண்டும். தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு பணிகள் ஒதுக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இதுவரை வேலை ஒதுக்கீடு செய்யாத ஊராட்சிகளுக்கு வேலை ஒதுக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஊராட்சி தலைவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Tiruppuvanam ,Panchayat Leaders Association ,Tiruppuvanam Union ,Union ,Panchayat Union ,Office Complex ,Panchayat Leaders ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் மனு