×

15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்: ஹத்ராஸ் பரபரப்பு ஓயும் முன்பாக அடுத்தடுத்த பயங்கரம்!!

லக்னோ: ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட பரபரப்பு ஓயும் முன்பாகவே, அடுத்தடுத்து இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானைத் தொடர்ந்து குஜராத்திலும் ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.  

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் நகரில் 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து ஒரு கும்பல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தர்ஷன் பாட்டியா, மிலான் பாட்டியா, தேவ்கரன் காட்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4-வது குற்றவாளி மொஹித் பாட்டியா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவத்துக்கு குஜராத் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ. ஜிக்னேஸ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் என பதிவிட்டிருக்கிறார்.

இதே போன்று மஹிசாகர் மாவட்டம் சாந்த்ராம்பூரில் கடந்த 15 நாட்களாக 35 வயது பெண் ஒருவர் இரண்டு நபர்களால் பல முறை அச்சுறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் நம்பரை தொலைபேசி ரீசார்ஜ் சாவடியில் இருந்து குற்றவாளிகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Hadras , Girl, sleeping pill, rape, pornography, hadras, terror
× RELATED உபியில் பயங்கரம்; பள்ளியின்...