செய்முறைஇளநீர் வழுக்கை துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில்
விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி
சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி
காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள்
சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து கலந்து இறக்கவும்.
இதன்மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து
பருகலாம். இனிப்புச்சுவையுடன் இளநீர் பாயாசம் தயார்.
The post இளநீர் பாயாசம் appeared first on Dinakaran.
