×

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் கடந்த சில நாட்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று மதியம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த பினாகினி விரைவு ரயிலில் வந்த பயணிகளை சென்ட்ரல் ரயில்வே காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் பையுடன் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது 4 பொட்டலங்களில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.  விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த முருகன் (22), சீர்காழியை சேர்ந்த கவின்குமார் (21) ஆகியோர் என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்….

The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Chennai ,Thandaiyarpet ,
× RELATED பெசன்ட் நகரில் பரபரப்பு ஆந்திர எம்.பி....