×

ரவுடி ராக்கெட் ராஜாவுக்கு குண்டாஸ் ஐகோர்ட் ரத்து

மதுரை: ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ஐகோர்ட் கிளை ரத்து செய்துள்ளது.  நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் செந்தில்குமார் கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியைச் சேர்ந்த ராஜா (எ) ராக்கெட் ராஜா (45) கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார். இவர், தற்போது குண்டர் சட்டத்தின் கீழும் கைது ெசய்யப் பட்டார். இதை எதிர்த்தும், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ராக்கெட் ராஜா தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு...