×

அவரை சாகுபடியை ஊக்குவிக்க கோரிக்கை

தேவாரம், ஆக.1: தேவாரம் பகுதியில், அவரைக்காய் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் காய்கறி விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 100 ஏக்கர் வரை அவரைக்காய் விவசாயம் நடந்தது. இடைக்காலங்களில் மழை இல்லாததால் இதன் விவசாயம் சுருங்கியது. காய்கறி விவசாயத்தை பொறுத்தவரை மழை மிகவும் அவசியம். இப்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது காய்கறி விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்க வேளாண்மைதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அவரை சாகுபடியை ஊக்குவிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devaram ,Gombai ,Rannapuram ,Bodi ,Uttamapaliam ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலைகள் கரைப்பு விபத்து...