×

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி போலீசார் விசாரணை செங்கம் அருகே நிலத்துக்கு சென்றபோது

செங்கம், டிச.1: செங்கம் அருகே நிலத்துக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குப்பன். இவரது மனைவி சரசு(45). நேற்று காலை வழக்கம்போல் சரசு விவசாய பணிக்காக அதே பகுதியில் உள்ள தங்களது நிலத்திற்கு சென்றார். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இவர்களது விவசாய நிலம் வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற சரசு இதனை கவனிக்காமல் மின்கம்பி மீது மிதித்தபடி சென்றுள்ளார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலத்திற்கு சென்ற சரசு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குப்பன் அங்கு சென்று பார்த்தார். அப்போது, மனைவி சரசு மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி போலீசார் விசாரணை செங்கம் அருகே நிலத்துக்கு சென்றபோது appeared first on Dinakaran.

Tags : Sengam ,Thiruvannamalai district ,Dinakaran ,
× RELATED செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள்...