×

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள்

 

அரியலூர்,மே 27: அரியலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமையில் இன்று (26.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Meeting ,Ariyalur District ,Ariyalur ,People's Grievance Redressal Day Meeting ,Ariyalur District Collectorate Office Hall ,P. Irathinasamy ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...