வியாபாரிகளை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது; ஓசியில் நுங்கு கேட்டு
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெயின்டரிடம் வழிப்பறி 3 ரவுடிகள் சிக்கினர்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.474.69 கோடி மதிப்பீட்டிலான 5 திட்டப்பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு: ரூ.59.15 கோடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
போலீசில் பொய் புகார் அளித்த 5 பேர் கைது
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
புளியந்தோப்பில் 10 பேர் கொண்ட கும்பலால் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் சீரழிக்கப்பட்ட கொடூரம்: 8 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
புளியந்தோப்பில் பரபரப்பு; ரவுடியை பீர்பாட்டிலால் தாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது