- திருமூர்த்திமலை
- அம்மனலிங்கஸ்வரர் கோயில்
- உடுமலை
- திருமூர்த்திமலை
- உடுமலை, திருப்பூர் மாவட்டம்
- ஆதி அமாவாசி
- அமாவாசி
- பவுர்ணமி
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மலையில் 800 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
தினசரி ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அருவியில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சத்தில் கோயில் வளாகம் ஜொலிக்கிறது. மாலை நேரத்தில் திருமூர்த்திமலையின் பின்னணியில் கோயில் ஜொலிப்பதை பக்தர்கள் பலரும் பார்த்து ரசித்து, செல்பி எடுத்து செல்கின்றனர்.
