×

திருப்பதி நெய் கலப்பட வழக்கில் ஒரு நபர் ஆணையம் மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

ஐதராபாத்: திருப்பதி நெய் கலப்பட வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடத்திய ஒரு நபர் ஆணையம் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தரமான நெய் விநியோகத்தை தடுக்க டெண்டர் விதிகளை தர்மா ரெட்டி தளர்த்தியாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தர்மா ரெட்டியின் முடிவுகளால் மோசடி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றதாக விசரணை ஆணையம் அறிக்கை வெளியிட்டது. கலப்பட நெய் முறைகேடுக்கு முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியே காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupathi ,Ghalatam ,Hyderabad ,Tirupati Ghee Khalanthat ,Dharma Reddy ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வால் சோப்பு, ஷாம்பு விலை உயர்கிறது