கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி கொடுக்கச் சென்ற அர்ச்சகர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் இறங்கி சடங்குகளில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
