டெல்லி: 9ம் வகுப்பில் மும்மொழியை அமல்படுத்த வேண்டாம் என நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். 8ம் வகுப்பு இறுதியிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அழுத்தம் தொடங்கி விடுகிறது. 6ம் வகுப்பில் 3வது மொழியை தொடங்கி 8ம் வகுப்புடன் முடித்து விட வேண்டும். 9ம் வகுப்பில் புதிய மொழியை பயிற்றுவிக்க வேண்டாம். 1976ல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். 9ம் வகுப்பில் மும்மொழி என்பது மோசமானது என்றும் கூறியுள்ளார்.
