குமாரபாளையம், ஜூலை 10: குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைக்கு மாணவர் தேர்வு நடைபெற்றது. குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படைக்கான மாணவர் தேர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஹவில்தார் டில்லிராஜா பங்கேற்று, தேசிய மாணவர் படைக்கு 26 மாணவர்களை தேர்வு செய்தார். தேர்வு செய்யப்படும் இந்த மாணவர் படையினருக்கு, பள்ளியில் 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும்.
