நெல்லை: ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல்; திருமணம் செய்வதாக அழைத்துச் சென்ற நெல்லையைச் சேர்ந்த வைகுந்தன் (20) என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், நெல்லை வந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞர் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
