×

பெயிண்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளர் தற்கொலை

 

மேட்டுப்பாளையம், ஜூலை 9: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி ஆண்டாள். இந்த தம்பதிக்கு பிரசாந்த் (31) என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது தாய் ஆண்டாள் வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர்,திரும்பி வந்து பார்த்தபோது பிரசாந்த் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

Tags : Mettupalayam ,Rajamanickam ,Mahadevapuram ,Vailattu Mariamman Kovil Road ,Andal ,Prashanth ,
× RELATED ரத்தினம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு