திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பம்பர் லாட்டரி குலுக்கலின் பரிசுத் தொகையை ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்து கேளா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான லாட்டரி டிக்கெட்டை வரும் 17ம் தேதி முதலமைச்சர் சதீசன் வெளியிட உள்ளார். பரிசுத் தொகை உயர்த்தப்பட்டாலும் லாட்டரி டிக்கெட் விலை ரூ.500 ஆகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
