மதுரை, ஜூலை 6: மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (75). மேலமடையில் உள்ள இவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கிட்னி பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஜூன் 27ம் தேதி கழிப்பறைக்கு சென்ற போது, அங்கு தடுக்கி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் வேல்முருகன் புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
