×

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

காஞ்சிபுரம், ஜூலை 3: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு, சமூக நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, காலிப்பணியிடங்களுக்கு குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வரும் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

 

Tags : Violence Against Women Guidance Centre ,Kanchipuram ,Social Welfare Department ,Kanchipuram district ,Tamil Nadu ,Kanchipuram district… ,
× RELATED வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது