சென்னை: இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய சமூகநீதி மண் தமிழ்நாடு. இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகளை பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
