திருவனந்தபுரம்: கேரளத்தில் நிபா, ஷிகெல்லா, டெங்கு, மலேரியா உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. ஷிகெல்லா பாதித்து இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். நிபாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்தநிலையில் பாலக்காட்டில் பன்றிக் காய்ச்சல் (எச்1 என்1) பாதித்து சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் நேற்று முன்தினம் இறந்தார்.
