×

ப்ப்ப்பா..Mass பண்ணிட்டாரு பா விஜய்.! எந்த படத்துல? அட சபையில பா; அந்த ஆக்ஷன் இருக்கே வேற லெவல் மெச்சூரிட்டி…

சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார். அவர் பேசி கொண்டிருக்கும் போதே பாதியிலேயே திமுக-வினர் வெளிநடப்பு செய்துவிட்டனர் இருந்தாலும் நான் திமுக-வினர் பற்றி பேசலாமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி கொண்டு, தனக்கு எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டை முதல்வர் விஜய் என்பதை சிறிது நேரம் மறந்து விட்டு, நடிகர் விஜய்யாக மாறி சட்டப்பேரவையில் படித்து (நடித்து) காட்டினார்.

என்ன தான் இருந்தாலும் தற்போதைய முதல்வர் நடிகராக இருந்தவர் தானே, அதனால் சில டயலாக்ஸ்களை நன்கு மனப்பாடம் செய்து வந்திருப்பார் போல, பின்னணியில் BGM ஒலிப்பதாக கற்பனை செய்து கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட டயலாக்ஸ்களை வரி மாறாமல் நடிகர் விஜய்யின் மாடுலேஷன் மற்றும் பாடி லாங்குவேஜில் பேசி, தன்னுடைய கட்சி MLA-க்களிடம் கை தட்டலை பெற்றார் முதல்வர் விஜய்.

அதிலும் உச்சகட்டமாக பேச்சை முடிக்கும் முன் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன் கூட்டணி பேச்சுவார்தை குறித்து எதார்த்தமாக காட்டிய “முடிச்சிட்டோம்” என்ற பினிஷிங் சைகையை (Finishing Gesture), சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முன்அனுமதி பெற்று அதை அப்படியே செய்து வித்தை காட்டியது எல்லாம் “நான் முதல்வர் விஜய் அல்ல; இன்னும் நடிகர் விஜய் தான்” என்பதை மாஸாக தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் உரக்க சொல்லி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பழைய தேர்தல் பிரசார சைகையை, நாட்டின் உயரிய சட்டசபைக்குள் முதல்வர் விஜய் அப்படியே செய்து காட்டியது அரசியல் நாகரிகமற்ற செயல் என பல்வேறு கட்சி தலைவர்களும், அரசியல் நிபுணர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆட்சியமைத்த பின் திருச்சியில் விஜய் முதல்வராக பேசவில்லை, இன்னும் மெச்சூரிட்டி வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் அட்வைஸ் செய்த நிலையில், அட போங்கய்யா நீங்களும், உங்க அட்வைஸூம் “ஒரு தடவ முடிவு பண்ணிட்டா நானே என் பேச்ச கேக்க மாட்டேன்” என்கிற தனது டயலாக்கிற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் முதல்வரானாலும் பழசை மறக்காத நடிகர் விஜய்.

Tags : Vijay ,Chennai ,Chief Minister ,Tamil Assembly ,Dimog-Viner ,
× RELATED அசெம்பளி கூட அவங்களுக்கு ஷூட்டிங்...