- கர்நாடக
- அமைச்சர்
- ஆதவ்
- சென்னை
- பொது பணிகள்
- விளையாட்டு அபிவிருத்தி
- ஆதவ் அர்ஜுனா
- தமிழ்நாடு அரசு
- சிறப்பு நடுவர் நீதிமன்றம்
- தீர்ப்பாயம்
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- Megadadu
சென்னை: காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தனி நடுவர் மன்றம் (Tribunal) கோரிக்கை குறித்த சட்டப்பேரவை விவாதத்தின் போது, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசினார்.
காவிரி நீர் உரிமையை பாதுகாக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் 30 ஆண்டுகளாக பேராடி வருகின்றன என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறி இருக்கிறார். புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் ஏற்கப்பட்டது குறித்து விரிவான விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, குடிநீருக்காக என கூறி மேகதாதுவில் அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்தப் பார்க்கிறது கர்நாடகா. விளக்கமாக சொன்னால் குடிநீர்த் தேவை என்ற போர்வையில் மேகதாதுவில் அணையைக் கட்டி, கர்நாடகா திட்டமிட்டே புதிய சட்டச் சிக்கல்களை உருவாக்கப் பார்க்கிறது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
காவிரி நதிநீர் ஆணையம் மீது நாம் முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளோம். மேகதாதுவில் அணை கட்டுவதற்காக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி, காவிரி நதிநீர் ஆணையம் கர்நாடக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அதே போல உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடகாவின் அறிக்கையை ஏற்ற மத்திய நீர்வள ஆணையம் மீது துளியும் நம்பிக்கை இல்லை. எனவே முன்னணி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகே, புதிய நடுவர் மன்றம் அமைக்கலாம் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார்.
காவிரி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை அமைப்புகளில் வெறும் அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் இயங்கும் தனி நடுவர் மன்றம் (Tribunal) மூலமே தமிழ்நாட்டின் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
