உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று கடற்படைக் கப்பல்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று கடற்படைக் கப்பல்களைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே கட்டப்பட்ட மூன்று கடற்படைக் கப்பல்களான – மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான துனகிரி, பெரிய ஆய்வுக் கப்பலான சன்ஷோதக் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போருக்கான ஆழமற்ற நீர்க்கப்பல் அக்ரே – ஆகியவை கடல்சார் போர், நீரியல் அளவீடு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் ஆகிய துறைகளில் முக்கிய செயல்பாட்டுத் திறன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

Related Stories: