சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதிக்கு மாறாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை உதயநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
