சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா(19 வயது) தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது கோபிகாவும் தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 21ம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
