மது விற்றவர் கைது

தேனி, ஜூன் 13: போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை மலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக் மது விற்றவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை மலைக்கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதாக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் அகமலை கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் அகமலை கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Related Stories: