பழநி, ஜூன் 13: பழநி அருகே அ.கலையம்புத்தூர் அழகாபுரியை சேர்ந்தவர் சந்தியா (19). சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
