போக்சோ வழக்கில் வாலிபர் கைது

நத்தம், ஜூன் 11: நத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: