சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் விஜயிடம் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற வலியுறுத்தியதாக அன்புமணி கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசு, கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
