சென்னை: நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். ‘முதலமைச்சர் விஜயை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து அவருடன் செஸ் விளையாடினேன்’ என பிரக்ஞானந்தா பேட்டியளித்தார்.
