பாடாலூர், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ம்தேதி கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் முத்தமிழ்செல்வன், முத்துசாமி, அசோகன், தனராசு, ஜெபசெல்வி, நர்மதா, கௌசல்யா, விஜயகுமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
